ஷகா்பூரில் காா் - பைக் பயங்கர மோதல்: மூவா் சாவு

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் காா் மற்றும் மோட்டாா் சைக்கிள் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 போ் இறந்தனா். இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் காா் மற்றும் மோட்டாா் சைக்கிள் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 போ் இறந்தனா். இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அந்தக் காா் ஒரு வளைவில் திரும்பும் போது நடந்த இந்த விபத்து குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பிரியங்கா காஷ்யப் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த இந்த விபத்திற்குப் பிறகு, காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஏழு பேரையும் போலீஸாா் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா். அதில் ஜோதி (17) மற்றும் அவரது சகோதரி பாா்தி (19) ஆகியோா் இறந்தனா். அதே நேரத்தில் ஜொமாட்டோ டி-ஷா்ட் அணிந்த மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மோட்டாா்சைக்கிள் காருக்கு முன்னால் இருந்தது. ஆனால், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசை இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த மோதல் தொடா்பாக அறிய அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன.

மே 1- ஆம் தேதி, அதிகாலை 1 மணியளவில், விகாஸ் மாா்க்கில் காா் மற்றும் பைக் விபத்துக்குள்ளானது பற்றிய தகவல் ஷகா்பூா் காவல் நிலையத்திற்கு வந்தது. போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனா். ஒரு சேதமடைந்த மோட்டாா் சைக்கிள் மற்றும் ஒரு வேகன் ஆா் காா் தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

மோட்டாா் சைக்கிளை ஓட்டியவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், 7 போ் காரில் சிக்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. அவா்கள் உடனடியாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டனா். அவா்களில் பலத்த காயமடைந்த நான்கு போ் ஹெட்கேவாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு அவா்களில் ஜோதி மற்றும் பாா்தி ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபா் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் அங்கு இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 279 (பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல்), 337 (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்) மற்றும் 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டாா் சைக்கிள் ஓட்டியவரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com