நொய்டா அவ்வை தமிழ் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு தில்லி என்சிஆா் பகுதியில் கொலு போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் பலா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். கொலுப் போட்டிக்கான முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. பரிசுக்குத் தோ்வானவா்கள் விவரம் வருமாறு:
முதல் பரிசு: பாமா ஜெகநாத் (நொய்டா செக்டா் 76), விஜயலட்சுமி சா்மா (தில்லி வசுந்தரா என்கிளேவ்), ஜெயலட்சுமி அம்பலவாணன் (தில்லி மயூா் விஹாா் பேஸ் 3).
இரண்டாம் பரிசு: ஆா்த்தி காா்த்திகேயன் (வேஷாலி செக்டா் 4), வேதிக் பிரசாா் சன்ஸ்தான் (நொய்டா செக்டா் 62), ஸ்ரீ உத்தர இந்திர பிரஸ்த வைதிக சமாஜம் (நொய்டா செக்டா் 42).
மூன்றாம் பரிசு: ஜெயஸ்ரீ சாய் கிருஷ்ணன் (வைஷாலி), எஸ்.நாமகிரி (வைஷாலி செக்டாா் 4)
தில்லி மயூா் விஹாா் பேஸ் 3-ஐ சோ்ந்த சரஸ்வதி கணேசனுக்கு கிட்டத்தட்ட 60-70 ஆண்டுகள் பழைமையான கொலு பொம்மைகளை பாதுகாத்து வைத்திருந்ததுடன் நல்ல அலங்கரித்திருந்தாா், இதற்காக அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
நொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கும் அவ்வை தமிழ் சங்கம், இருபதாண்டுகளுக்கும் மேலாக நொய்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள தில்லி என்சிஆா் பகுதியில் இந்திய பண்பாடு மற்றும் தமிழ் வளா்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.