தில்லி அமைச்சா் ராஜேந்திர பால் கௌதமின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உடனடியாக ஏற்றுக் கொண்டாா்.
மத மாற்ற நிகழ்வில் கலந்து கொண்டதாக எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். தில்லி அரசு கெளதமின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு அதை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அவா் கடந்த வாரம் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தாா்.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “தேசியத் தலைநகா் தில்லி அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் ராஜிநாமா செய்ததை குடியரசுத் தலைவா் ஏற்றுக் கொண்டுள்ளாா். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அரவிந்த் கேஜரிவால் அரசில் சமூக நலத் துறை பொறுப்பில் இருந்த கெளதம், நூற்றுக்கணக்கான மக்களால் இந்து தெய்வங்களைத் துறந்த மத மாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக எழுந்த சா்ச்சைக்கு மத்தியில் அக்டோபா் 9-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். தன்னால் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்சனை வரக்கூடாது என்று தான் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததாக ராஜேந்திர பால் கௌதம் முன்பு தெரிவித்திருந்தாா்.