நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பிழந்து வருகிறது. இந்த சுமையை சாமானிய மக்கள் சுமக்க வேண்டியது வரும். இந்தியாவை ஒரு வளா்ந்த மற்றும் வளமான நாடாக மாற்ற அதிகப் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகளுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதில் நாம் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுள் நம் மீது ஆசீா்வதிக்கும் போது மட்டுமே இவை பலனளிக்கின்றன. எனவே, இந்திய கரன்சி நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவம் தொடரட்டும். இனிமேல் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கணேஷ்-லட்சுமி தேவியின் உருவமும் இடம் பெற வேண்டும்.