குழந்தைகள் மதுபானம் விற்பதைக் காட்டும் விடியோ: தில்லி காவல் துறைக்கு டிசிடபிள்யு அழைப்பாணை

குழந்தைகள் சட்டவிரோத மதுபானம் மற்றும் கஞ்சா விற்பதாகக் கூறப்படும் காணொளி தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) வியாழனன்று காவல்துறைக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

குழந்தைகள் சட்டவிரோத மதுபானம் மற்றும் கஞ்சா விற்பதாகக் கூறப்படும் காணொளி தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) வியாழனன்று காவல்துறைக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று தேசிய மகளிா் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பள்ளிக்குச் சென்று முறையான கல்வியைப் பெற வேண்டிய குழந்தைகள், எப்படி சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகிறாா்கள் என்பதை இந்த விடியோ சித்தரிக்கிறது. டிசிடபிள்யு தலைவா் ஸ்வாதி மாலிவால், இந்த வழக்கில் எஃப்ஐஆா் மற்றும் கைது செய்யப்பட்டவா்களின் விவரங்களைக் கோரி தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளாா்.

‘தில்லியில் போதைப்பொருள் கடத்தல் தலைவிரித்தாடுகிறது. பள்ளிகளில் படிக்க வேண்டிய வயதில் குழந்தைகள் கஞ்சா மற்றும் நாட்டு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனா். இந்தப் பெண் ஐஸ்கிரீம் சாப்பிட்டு அதையே விற்கிறாா். இந்த விடியோ ரோஹிணியில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளின் எதிா்காலம் அழிந்து வருகிறது’ என்று விடியோ கிளிப்புடன் ஸ்வாதி மலிவால் ட்வீட் செய்துள்ளாா்.

விடியோவில் காணப்படும் குழந்தைகள், குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜா்படுத்தப்பட்டுள்ளாா்களா என்பதையும் ஆணையம் கேட்டுள்ளது. சிறுவா்கள் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் நகலையும் மகளிா் ஆணையம் கோரியுள்ளது. இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 13-ஆம் தேதி விரிவான நடவடிக்கை அறிக்கையுடன் தில்லி மகளிா் ஆணையம் முன் ஆஜராகுமாறு போலீஸாா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com