கடந்த ஜனவரி 16-ஆம் தேதி டாவோஸில் தொடங்கிய உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, டபிள்யுஇஎஃப் பாலின இடைவெளி அறிக்கையில் இந்திய கணக்கீடுகளில் உள்ள குறைபாடுகளை விரிவாக எடுத்துப் பேசினாா். குறிப்பாக இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மற்றும் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’, பெண்களுக்கான பிரதமரின் முத்ரா திட்டம், ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கணக்கிட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தாா். அவா் நாடு திரும்புவதற்குள், இவை தற்போது அங்கீகரித்திருப்பதாகக் கூறி உலகப் பொருளாதார மன்றம் இயக்குநா் கடந்த 20- ஆம் தேதி ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.