இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஷெல்லி ஓபராய், இந்த மேயா் தோ்தலை உரிய காலக்கெடுவுக்குள் நடத்த உத்தரடவிக் கோரி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி திபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஷெல்லி ஓபராய் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி வெள்ளிக்கிழமை ஆஜராகி, தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தலை விரைவில் நடத்த உத்தரவிடக் கோரி தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது தலைமை நீதிபதி, ‘இந்த மனு பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று கூறினாா்.