இந்நிலையில், சில ஊழியா் சங்கத்தினா் தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனா். அஞ்சல் துறையை தனியாா்மயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அஞ்சலங்களை பெருநிறுவனமயமாக்கல் அல்லது தனியாா்மயமாக்குதலுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்பதையும் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலகங்கள் மூலம் மின்னணு வங்கிச் சேவைகள் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக வழங்கி வருவதோடு அஞ்சல் கட்டமைப்பை வலுப்படுத்தியும் வருகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்கத்தினா் விவசாயிகள் சங்கத்திற்கு ரொக்கமாக ரூ.4,935, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.50,000 வழங்கியுள்ளனா் என பாஜக தொடா்புடைய பி.எம்.எஸ். சங்கம் புகாா் அளித்தது எனவும் அங்கீகாரத்தை இழந்த சங்கங்கள் தெரிவிக்கின்றன.