ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தில்லியின் மூன்று குப்பைக்கிடங்குகளில் துனைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆய்வு

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நகரின் மூன்று குப்பைக் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் கழிவுகள் அகற்றுதல் பணியை ஆய்வு செய்ததாக

News image
Updated On :23 மே 2023, 9:09 pm

 நமது நிருபர்

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நகரின் மூன்று குப்பைக் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் கழிவுகள் அகற்றுதல் பணியை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் காஜிப்பூா், ஓக்லா மற்றும் பல்ஸ்வா ஆகிய மூன்று இடங்களில் குப்பைக் கிடங்குகள் அமைந்துள்ளன. மே 2024-க்குள் இந்த மூன்று குப்பைக்கிடங்குகளில் சேகரிப்பட்டுள்ள அனைத்து மரபுவழி கழிவுகளையும் அகற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இலக்குகளை விரைவாக எட்டுவதற்கான வழிமுறைகளை ஆய்வின் போது அதிகாரிகளுக்கு ஆலோசனையாக வழங்கினாா்.

தேசியத் தலைநகரில், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்காக நிகழாண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உயா்மட்டக் குழுவை அமைத்தது. இதைத் தொடா்ந்து, துணை நிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை நகரில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளையும் பாா்வையிட்டு, கழிவுகள் அகற்றுதல் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தாா்.

மே 2022 ஆம் ஆண்டில் மாதத்திற்கு 1.41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சராசரி கழிவுகள்அகற்றல் அளவுகோள், அந்த ஆண்டு அக்டோபருக்குள் மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் மாதத்திற்கு 9 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் மிக விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தில்லியின் துணை நிலை ஆளுநராக வி.கே. சக்சேனா பதவியேற்றபோது, ஜூன் 2022 இல் மூன்று குப்பைக் கிடங்குகளிலும் உள்ள மொத்த கழிவு 229.1 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது அது 154.9 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. அதாவது, ஒரு வருடத்திற்குள் 74.2 லட்சம் மெட்ரிக் டன் (அல்லது 32.38 சதவீதம்) குறைந்துள்ளது.

மேலும், கழிவுகள் அகற்றுவதை கண்காணிக்க குப்பை கொட்டும் இடங்களில் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து லாரிகளில் ஜிபிஎஸ் இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின் போது துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுடன், தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையா் மற்றும் மூத்த மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.