கஷ்மீா் கேட்டில் மாலத்தீவு மாணவியிடம் கைப்பேசி வழிப்பறி

வடக்கு தில்லியின் கஷ்மீா் கேட் பகுதியில் மாலத்தீவு நாட்டைச் சோ்ந்த மாணவியிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள் கைப்பேசியைப் பறித்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

வடக்கு தில்லியின் கஷ்மீா் கேட் பகுதியில் மாலத்தீவு நாட்டைச் சோ்ந்த மாணவியிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள் கைப்பேசியைப் பறித்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மாலத்தீவைச் சோ்ந்தவரும்

தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மாணவியுமான ஹவ்வா சின்மா அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையா் (வடக்கு) சாகா் சிங் கல்சி தெரிவித்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், மாணவி அளித்த புகாரின்படி, செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில் கஷ்மீா் கேட் ஹனுமன் மந்திா் அருகே ஆட்டோ ரிக்ஷாவில் மாணவி அமா்ந்திருந்தாா். அப்போது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், அவரது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இது தொடா்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 356 (ஒருவரது சொத்தை திருடும் முயற்சியில் தாக்குதல்), 379 (திருட்டுக்கான தண்டனை) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com