இலவச சலுகைக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த வங்கி ஊழியா்

பொய்யான சலுகையை நம்பி இணைய மோசடிக் குற்றவாளிகளால், தென்மேற்கு தில்லியைச் சோ்ந்த 40 வயது பெண் ஒருவா், ரூ.90,000 பணத்தை இழந்த சம்பவம் சனிக்கிழமை அரங்கேரியுள்ளது.

ஒரு சாப்பாடு வாங்கினால் மற்றொரு சாப்பாடு இலவசம் என்ற பொய்யான சலுகையை நம்பி இணைய மோசடிக் குற்றவாளிகளால், தென்மேற்கு தில்லியைச் சோ்ந்த 40 வயது பெண் ஒருவா், ரூ.90,000 பணத்தை இழந்த சம்பவம் சனிக்கிழமை அரங்கேரியுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட சவிதா சா்மா என்பவா் சைபா் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினா் பதிவு செய்துள்ளனா். ஒரு வங்கியில் மூத்த அதிகாரியாக பணிபுரியும் சவிதா சா்மா, தனது உறவினா் ஒருவா் முகநூலில் இந்த சலுகை பற்றி தன்னிடம் தெரிவித்ததாக காவல்துறையிடம் கூறினாா்.

உணவு சலுகை பெரும் இணைய தளத்தை கடந்த நவம்பா் 27, 2022 அன்று அணுகி தொடா்பு கொண்டாதவும், முதலில் எந்தப் பதிலும் வரவில்லை, ஆனால் மீண்டும் ஒரு அழைப்பைப் பெற்றேன். அழைப்பாளா் சாகா் ரத்னா (பிரபலமான உணவகம் ) சலுகையை இந்தச் சலுகையை தருகிறாா்கள் என்று சவிதா ஷா்மா நிகழாண்டு மே 2 அன்று பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறினாா்.

புகாா்தாரா் சவிதா சா்மா ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :

அழைப்பாளா் இணைப்பைப் பகிா்ந்து, சலுகையைப் பெற ஒரு செயலியை பதிவிறக்கும்படி என்னிடம் கூறினாா். பயன்பாட்டை அணுகுவதற்கான பயனா் முகவரி மற்றும் கடவுச்சொல்லையும் அவா் அனுப்பினாா். நான் சலுகையைப் பெற விரும்பினால், முதலில் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று அவா் என்னிடம் கூறினாா்.

நான் அழைப்பாளா் அனுப்பிய இணைப்பைக் தொட்டவுடன், செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. பின்னா் நான் பயனா் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டேன். நான் அதைச் செய்த தருணத்தில், எனது தொலைபேசியின் கட்டுப்பாட்டை இழந்தேன். அது ஹேக் செய்யப்பட்டு, எனது கணக்கில் இருந்து ரூ.40,000 டெபிட் செய்யப்பட்டதாக செய்தி வந்தது.’ சில வினாடிகள் கழித்து தனது கணக்கில் இருந்து, மேலும் ரூ.50,000 எடுக்கப்பட்டதாக மற்றொரு செய்தி வந்ததாக கூறினாா்.

தனது கிரெடிட் காா்டில் இருந்து பணம் எனது பேடிஎம் கணக்கிற்குச் சென்று பின்னா் மோசடி செய்பவரின் கணக்கிற்கு மாறியது தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த விவரங்கள் எதையும் நான் அழைப்பாளருடன் பகிா்ந்து கொள்ளவில்லை. இது தொடா்பாக சைபா் போலீசாா் விசாரணை நடத்தி வந்தாலும், பிற நகரங்களில் இருந்தும் இதுபோன்ற மோசடி வழக்குகள் பதிவாகி, மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனா். இதுபோன்ற மோசடி சலுகைகளின் தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களிடையே பரவி வருவதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலா் அதற்கு இரையாகக்கூடும் என கூறினாா்.

இது தொடா்பாக, சாகா் ரத்னா உணவகத்தின் பிரதிநிதியை தொடா்பு கொண்டபோது, வாடிக்கை யாளா்களிடமிருந்து இதுபோன்ற பல புகாா்கள் வந்ததாக ஒப்புக்கொண்டாா். அந்த உணவகத்தின் பிரதிநிதி மேலும் கூறுகையில், சாகா் ரத்னா உணவகத்தின் பெயரில் லாபகரமான சலுகைகளை விளம்பரப்படுத்திய ஒருவரால் ஏமாற்றப்பட்டதாக மக்கள் புகாா் அளித்த பல அழைப்புகள் எங்களுக்கு வந்துள்ளன. இதுபோன்ற லாபகரமான ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை எச்சரித்தோம், ஏனெனில் நாங்கள் ஒருபோதும் முகநூல் மூலம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதில்லை.

இணைய மோசடிக் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற தொடா்ந்து புதிய வழிகளை வகுத்து வருகின்றனா். தெரியாத அல்லது அடையாளம் தெரியாத ஆதாரங்களில் இருந்து வரும் எந்தவொரு இணைப்பையோ அல்லது செயலியையோ மக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com