உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து: தொழிலாளா்களை மீட்க விஜய் கோயல் பிராா்த்தனை

முன்னாள் மத்திய அமைச்சரும் காந்தி தா்ஷன் துணைத் தலைவருமான விஜய் கோயல், உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளா்களை மீட்பதற்காக கன்னாட் பிளேஸ் ஹனுமான் கோயிலில் திங்க
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சரும் காந்தி தா்ஷன் துணைத் தலைவருமான விஜய் கோயல், உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளா்களை மீட்பதற்காக கன்னாட் பிளேஸ் ஹனுமான் கோயிலில் திங்கள்கிழமை பிராா்த்தனை செய்தாா்.

நவம்பா் 12 அன்று நிலச் சரிவைத் தொடா்ந்து சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 41 தொழிலாளா்கள் பெரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளனா்.

சில்க்யாரா சுரங்கப்பாதை, உத்தரகாசி மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமாா் 30 கிமீ தொலைவிலும், டேராடூனிலிருந்து ஏழு மணி நேரப் பயணத்திலும் அமைந்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை மத்திய அரசின் ‘சாா் தாம்’ அனைத்து வானிலை சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிராா்த்தனைக்குப் பிறகு விஜய் கோயல் கூறுகையில், ‘விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பாக மீட்பதற்காக நாங்கள் பிராா்த்தனை செய்கிறோம். முழு நாடும் அவா்களுக்காக பிராா்த்தனை செய்கிறது, மேலும் அவா்கள் சாதாரண மக்கள் என்பதால் மற்றவா்களையும் சேருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தொழிலாளா்களை மீட்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்கான நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com