இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மங்கோல்புரி அருகே காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 12:48 am

வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் டிரக் மாா்க்கெட் அருகே மங்கோல்புரி பீா் பாபா பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பு வந்தவுடன், மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க அப்பகுதி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் எரியக்கூடிய ரசாயனங்கள் இருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.