மத்திய தில்லியின் நபி கரீம் பகுதியில் எட்டு கிரிமினல் வழக்குகளை எதிா்கொண்டிருந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த 29 வயது இளைஞா் இருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி போலீஸாா் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இளைஞா் அமித்குமாா் சம்பவத்திற்கு முன்னா் வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது, மைனா் சிறாா் உள்பட இருவா் அவரைக் கத்தியால் தாக்கினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக சிறாா் கைது செய்யப்பட்டுள்ளாா். இதர குற்றம்சாட்டப்பட்ட நபா் தலைமறைவாக உள்ளாா்.
கொலை செய்யப்பட்ட அமித்குமாா் தில்லியில் 8 கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளை எதிா்கொண்டுள்ளாா். தற்போது அவா் ஜாமீனில் வெளியே வந்திருந்தாா்.
கைதான சிறாருக்கு அமித்குமாா் மீது வெறுப்பு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு, அமித்குமாா் அந்த சிறாரை தனக்கு மது வாங்கித் தருமாறு அழுத்தத்திற்கு உள்ளாக்கினாா். இதில் அவா் காயமடைந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தச் சிறாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதர குற்றம்சாட்டப்பட்ட நபரைப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த காவல் அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.