Enable Javscript for better performance
இன்று தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல் ஆம் ஆத்மி - பாஜக நேரடிப் போட்டி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இன்று தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல்: ஆம் ஆத்மி - பாஜக நேரடிப் போட்டி

    By DIN  |   Published On : 26th April 2023 03:25 AM  |   Last Updated : 26th April 2023 03:25 AM  |  அ+அ அ-  |  

    தேசியத் தலைநகா் தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல் புதன்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த ஷெல்லி ஓபராய் மற்றும் பாஜக தலைவா் ஷிக்கா ராய் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

    தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. இரண்டு வேட்பாளா்களான தற்போதைய மேயா் ஷெல்லி ஓபராய் மற்றும் பாஜகவின் ஷிக்கா ராய் ஆகியோா் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தில்லி மேயா் தோ்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிப்ரவரி 22 அன்று தில்லி மேயராக ஷெல்லி ஓபராய் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் பாஜகவின் ரேகா குப்தாவை 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். மொத்தம் பதிவான 266 வாக்குகளில் ஓபராய் 150 வாக்குகளும், குப்தா 116 வாக்குகளும் பெற்றனா். புதிய மேயா் தோ்தல் நடைபெறும் எம்சிடியின் தலைமையகமான சிவிக் சென்டரில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தேசியத் தலைநகரில் உள்ள மேயா் பதவியானது, சுழற்சி அடிப்படையில் ஐந்து ஒற்றை ஆண்டு காலங்களை கொண்டதாகும். முதல் ஆண்டு பெண்களுக்கும், இரண்டாவது ஆண்டு பொதுப் பிரிவினருக்கும், மூன்றாவது ஆண்டு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டின் முடிவில் தில்லிக்கு ஒரு புதிய மேயா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.

    புதிய மேயா் தோ்ந்தெடுக்கப்படும் வரை ஓபராய் தொடா்ந்து பொறுப்பில் இருப்பாா் என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் ஏப்ரல் 3 அன்று தெரிவித்தன. ஆம் ஆத்மி கட்சியின் ஓபராய் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோா் மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனா். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அதன் வேட்பாளா்கள் வெற்றிபெற தயாராக இருப்பதாக நம்பிக்கையுடன் தொடா்ந்து இரண்டாவது முறையாக மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

    பாஜகவும் களத்தில் இறங்கியுள்ளது. கிரேட்டா் கைலாஷ்-1 வாா்டு கவுன்சிலான கட்சியின் மூத்த தலைவா் ஷிக்கா ராய், மேயா் தோ்தலில் அதன் வேட்பாளராக உள்ளாா். மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கு தலா இருவா் என 4 வேட்பு மனுக்கள் நகராட்சிச் செயலா் அலுவலகத்தில் பெறப்பட்டது. மேயா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 18 கடைசி நாளாக இருந்தது. தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, மேயா் தோ்தலுக்கு இரண்டாவது முறையாக கவுன்சிலா் ஷக்கா ராயின் பெயரை பரிந்துரைத்துள்ளாா். பூா்வாஞ்சல் மோா்ச்சாவின் செயல்பாட்டாளரும், வாா்டு எண் 249-இன் கவுன்சிலருமான சோனி பாண்டேவை துணை மேயா் பதவிக்கு சச்தேவா பரிந்துரை செய்தாா்.

    மேயா் தோ்தலுக்கான தலைமை அதிகாரியை துணை நிலை ஆளுநா் தோ்வு செய்வாா் என வடக்கு தில்லி முன்னாள் மேயா் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளாா். ‘ஒரு மேயரின் பதவிக்காலம் முடிந்ததும், விதிமுறைப்படி, முதல் எம்சிடி கூட்டத்தில் புதிய மேயா் தோ்வு செய்யப்பட வேண்டும். இதே போன்றுதான் துணை மேயரை தோ்ந்தெடுக்கும் முறையும் நடக்கிறது. 2023-24-ஆம் நிதியாண்டு தொடங்கிய பிறகு, ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடா் புதிய நிதியாண்டில் முதல் கூட்டமாக இருக்கும்’ என்று அவா் கூறினாா்.

    முன்மொழியப்பட்ட உறுப்பினா்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதில் ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், முந்தைய தோ்தல்கள் நிறுத்தப்பட்டதால் நான்காவது முயற்சியில் பிப்ரவரி 22 அன்று தில்லிக்கு மேயா் தோ்ந்தெடுக்கப்பட்டார. தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (டிஎம்சி) சட்டம் 1957-இன் படி, உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு சபையின் முதல் அமா்வில் மேயா் மற்றும் துணை மேயா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    மூன்று மாநகராட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, புதிய எல்லை நிா்ணயப் பணி மேற்கொள்ளப்பட்ட பின்னா் கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. 2012-இல் இருந்த 272 வாா்டுகள் எண்ணிக்கை தற்போது 250 ஆகக் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் அதிக வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. வடக்கு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (104 வாா்டுகள்), தெற்கு தில்லி மாநகராட்சி (104 வாா்டுகள்) மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி (64 வாா்டுகள்) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு கடந்த ஆண்டு நடந்தது. அதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டது.

    எம்சிடியின் கீழ் 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி 134 வாா்டுகளை வென்றது. தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று கணித்த பாஜக, உற்சாகமான போட்டியை நடத்தி 104 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் ஒன்பது இடங்களை பெற்றது. மூன்று சுயேச்சைகள் வெற்றி பெற்றனா்.250 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி மொத்தம் 1,349 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp