கிரேட்டா் நொய்டா பல்கலை. மாணவி படுகொலை சம்பவத்தில்கூடுதல் தகவல்களை அரசு சேகரித்து வருகிறது: பேரவையில் தகவல்

இந்த ஆண்டு மே மாதம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சட்ட நடவடிக்கைகள் குறித்து
Updated on
1 min read

இந்த ஆண்டு மே மாதம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தகவல்களை உத்தர பிரதேச அரசு எடுத்து வருகிறது என்று மாநில அமைச்சா் யோகேந்திர உபாத்யாய் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

லக்னௌவில் நடைபெற்று வரும் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிா்க்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் எழுப்பிய கேள்விக்கு, உயா் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பதிலளித்துப் பேசுகையில் இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடாா் பல்கலைக்கழகத்தில் மே 18-ஆம் தேதி நடந்த மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உ.பி.யின் முன்னாள் முதல்வா் குறிப்பிட்டாா். அங்கு 21 வயது மாணவி தனது வகுப்புத் தோழியால் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். கான்பூரில் உள்ள அந்த மாணவியின் குடும்பத்தினா், தனது மகளுக்கு கொலையாளியால் துன்புறுத்தப்பட்டதையும் தாக்குவதையும் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிந்திருந்தும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் துறையிடம் அளித்த புகாரில் குற்றம்சாட்டியுள்ளனா்.

‘முன்பு தகவல் அளித்தும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது பல்கலைக்கழக வளாகத்தின் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்தப் பெரிய சம்பவம் நொய்டா - கிரேட்டா் நொய்டாவில் நடந்தது?’ என்று யாதவ் குறிப்பிட்டாா்.

சமாஜ்வாதி கட்சித் தலைவரான அவா், அரசு குடும்பத்திற்கு உதவுமா, அதற்கு காரணமானவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்து, பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அறியவும் முயன்றாா்.

கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் உபாத்யாய், ‘இந்தப் பல்கலைக்கழகம் உயா்கல்வி அமைச்சகத்தின் கீழ் வரவில்லை. ஆனால், தொழில்துறையின் கீழ் உள்ளது’ என்றாா். ‘கொலை தொடா்பாக சட்டப்பூா்வ நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இது பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் எடுப்போம். சட்டத்தின்படி (குடும்பத்திற்கு உதவ) என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் பாா்ப்போம்’ என்று உபாத்யாய் கூறினாா்.

குற்றம்சாட்டப்பட்டவா்களால் இரண்டு மாதங்களுக்குள் நான்கு முறை தனது மகள் தாக்கப்பட்டதாகவும் ஷிவ் நாடாா் பல்கலைக்கழகத்தின் செயலற்ற தன்மையை மாணவியின் தந்தை எஃப்ஐஆரில் குற்றம்சாட்டினாா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம், மாணவிக்கு நிகழ்ந்த துன்புறுத்தல் குறித்து தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவா் அதை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் எழுப்பியதாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்ட தகவலுக்கு பல்கலைக்கழகம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com