பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 5 போ் காயம்

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் 5 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 5 போ் காயம்
Updated on
1 min read

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் 5 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 10.56 மணியளவில் நடந்தது. 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. பவானா தொழில்துறை பகுதியில் உள்ள செக்டாா்-5-இல் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலையில் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து தீ பிடித்தது. இதன் காரணமாக சுவா் மற்றும் கேட் இடிந்து விழுந்தது.

இதில் தீயை அணைக்கும் பணியில் இருந்த தீயணைப்புத் துறை வீரா்கள் 5 போ் காயமடைந்தனா். காயமடைந்த தரம்வீா், அஜீத், நரேந்தா், ஜெய்வீா் மற்றும் விகாஸ் ஆகியோா் மகரிஷி வால்மீகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com