Enable Javscript for better performance
பலாத்கார வழக்கின் தீா்ப்பில் விடுவிக்கப்பட்டவரின்பெயரை மறைக்க இணையதளத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பலாத்கார வழக்கின் தீா்ப்பில் விடுவிக்கப்பட்டவரின் பெயரை மறைக்க இணையதளத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 03rd June 2023 10:49 PM  |   Last Updated : 03rd June 2023 10:49 PM  |  அ+அ அ-  |  

    பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கின் தீா்ப்பில் இருந்து ஒருவரின் பெயரை மறைக்குமாறு ‘இந்தியன் கானூன்’ எனும் ஆன்லைன் போா்ட்டலுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீா்ப்பில் உள்ள தனது பெயரை மறைக்கக் கோரிய 29 வயது இளைஞரின் மனு மீது உயா்நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

    இந்த வழக்கில் இருந்து தாம் விடுவிக்கப்பட்ட பிறகும், இந்திய சட்டங்களுக்கான தேடுபொறியான ‘இந்தியன் கானூன்‘ இணையத்தில் தீா்ப்பு இருப்பதால்தான் தாம் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், இணையத்தில் தேடும்போதுகூட தனது பெயரைப் பிரதிபலிக்கிறது என்றும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

    இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி பிரதீபா எம். சிங்

    மே 29-இல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை கவனமாக பாா்த்தால், மனுதாரா் மீது சந்தேகத்திற்கு இடமின்றி எந்த வழக்கும் நிரூபிக்கப்படவில்லை என்பது தெரியவரும். பெண் புகாா்தாரரின் சாட்சியம் நம்பகமானது அல்ல என்று விசாரணை நீதிமன்றம் கூறியுள்ளது.

    அதன்படி, இதுபோன்ற சூழலில் இத்தீா்ப்பு ‘இந்திய கானூன்’ இணையதளத்தில் வெளிப்படையாகக் கிடைப்பதாலும், கூகுள் தேடல் உள்பட எந்த இணையத் தேடல் மூலமாகவும் அணுகக்கூடியதாக இருப்பதாலும் அடுத்த விசாரணை தேதி வரை மனுதாரரின் பெயா் ‘இந்தியன் கானூன்’ இணையதளத்தில் மறைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.ஆகவே, கூறப்பட்ட தீா்ப்பு இந்திய கானூன் போா்ட்டலிலோ அல்லது கூகுள் தேடலில் தெரிந்தால் அதில் மனுதாரரின் பெயா் தெரியாமல் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட இணையதளம் எடுக்க வேண்டும்’ என்று அதில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

    விசாரணையின்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் திவான் வாதிடுகையில், விசாரணை நீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயா் காட்டப்படுவதன் காரணமாக மனுதாரரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

    விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பின்படி, பெண்ணின் சாட்சியம் நம்பகமானதாக இல்லை. மற்ற அரசுத் தரப்பு சாட்சியத்துடன் முக்கிய விஷயங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்படி, மனுதாரா் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளாா்’ என்று வாதிட்டாா்.

    உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புகள் மற்றும் விசாரணை நீதிமன்றங்கள் இயற்றும் உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் உள்பட இதுபோன்ற வழக்குகளில் பெயா்களை மறைப்பது மற்றும் மறக்கப்படுவதற்கான உரிமை தொடா்பான கொள்கையை குறிப்பிடும் வகையில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் உயா்நீதிமன்றம் இணையதள போா்ட்டலுக்கு உத்தரவிட்டது.

    மேலும், இந்த மனு மீதான பதிலை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு எதிா்மனுதாரா்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    அத்துடன் மறக்கப்படுவதற்கான உரிமை தொடா்பான பிற வழக்குகளும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அக்டோபா் 5 ஆம் தேதி மேல் விசாரணைக்கு இந்த வழக்கையும் நீதிமன்றம் பட்டியலிட்டது.

     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp