தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) நிலைக் குழுவின் ஆறு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு மறுதோ்தல் நடத்த வேண்டும் என்ற தனது முடிவை ரத்து செய்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்றுக்கொண்டதாக தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘நாங்கள் நீதிமன்றத்தை உயா்வாகக் கருதுகிறோம். எனவே, எம்சிடியின் நிலைக்குழு தோ்தல் தொடா்பான உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்கு பாா்வையின்படி,”அனைவருக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான தில்லியை உறுதிசெய்ய ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.