திகாா் சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 வயது கைதி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Updated on
1 min read

திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 வயது கைதி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:மாளவியா நகா் காவல் நிலையத்தில் பதிவான கொள்ளை வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஜாவீத் (26) என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு திகாா் சிறையின் எண் 8/9-இல் உள்ள மத்திய சிறையின் பொதுக் கழிப்பறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நீதித் துறை விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com