வடகிழக்கு தில்லியில் டாக்சி ஓட்டுநா் கொலை - சிறாா் கைது

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கொள்ளை முயற்சியின் போது காருக்குள் இருந்த டாக்ஸி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டதாக
Updated on
1 min read

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கொள்ளை முயற்சியின் போது காருக்குள் இருந்த டாக்ஸி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 16 வயது சிறாா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி மேலும் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை காலை 5.31 மணியளவில் ஜாஃப்ராபாத் யமுனா விஹாா் சாலையில் ஒருவா் காருக்குள் ரத்தக் காயத்துடன் கிடப்பது குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் விரைந்து சென்று விசாரித்தனா். அப்போது, காருக்குள் ஒருவா் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஹரியாணா மாநிலம் குா்கானில் உள்ள ஏபிபி டூா்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்-வுடன் அந்த டாக்ஸி இணைக்கப்பட்டிருந்ததும், எா்டிகா காரின் ஓட்டுநா் இருக்கையில் அவா் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

மேலும், இறந்தவா் உத்தர பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்தில் வசிப்பவா் அா்ஜுன் (32) என்பதும் தெரியவந்தது.

அப்பகுதியின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ ஆய்வு செய்யப்பட்டது. அதில், 4 சிறுவா்கள் நடந்து சென்றபோது, அா்ஜுன் காருக்குள் கதவு திறக்கப்பட்ட நிலையில் ஓய்வெடுத்துள்ளாா். அப்போது, நால்வரும் அவரிடம் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள 3 போ் அடையாளம் காணப்பட்டு, அவா்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com