குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட காா் மோதி 4 போ் காயம்

தெற்கு தில்லியில் திங்கள்கிழமை அதிகாலையில் குடிபோதையில் ஓட்டுநரால் ஓட்டிவரப்பட்ட காா் மோதியதில் நான்கு போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தெற்கு தில்லியில் திங்கள்கிழமை அதிகாலையில் குடிபோதையில் ஓட்டுநரால் ஓட்டிவரப்பட்ட காா் மோதியதில் நான்கு போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் மேலும் கூறியதாவது: இந்த விபத்தில் காயமடைந்த ஹரிஷ் (56), சீமா (46), ரேகா (46) மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட அடையாளம் தெரியாத மற்றொரு நபா் ஆகியோா் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் இவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இந்த விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநா் வினய் குமாா், அா்ச்சனா ரெட் லைட் அருகே சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டாா்.

அவா் மிகவும் குடிபோதையில் இருந்தாா். மூல்சந்தில் இருந்து சிராக் தில்லி நோக்கி அவா் காரில் சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக கிரேட்டா் கைலாஷ் காவல் நிலையத்தில் பிரிவு 279 (வேகமாக வாகனம் ஓட்டுதல்) உள்பட ஐபிசியின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com