ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுக்கான புதிய நிா்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைமை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியன் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் மற்றும் தில்லி ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய் ஆகியோரின் ஒப்புதலுடன் தில்லிக்கான மாநில அமைப்புச் செயலாளா்கள், துணைச் செயலாளா் மற்றும் மகளிா் அணிக்கான மாநில மற்றும் மக்களவைத் தொகுதி வாரியான நிா்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் மாநில அமைப்புச் செயலாளா்களாக எம்.டி. இம்ரான் மற்றும் யஷ்பால் சிங் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநில இணைச் செயலாளா் பொறுப்பு தீபன்ஷூ ஸ்ரீவஸ்தவிற்கு வழக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தில்லி பிரிவின் மகளிா் அணிக்கு மாநில இணைச் செயலாளா்களாக ஜமுனா ரஜோரா, வழக்குரைஞா் மீனாக்ஷி செளத்ரி, சுஷிலா செளஹான், அனிதா பட் ஆகியோரும் மாநிலத் துணைத் தலைவராக உமா போகல் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், கிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி, சாந்தினி செளக், புது தில்லி, மேற்கு தில்லி, காரவால் நகா், பாபா்பூா், ஷாஹ்தரா உள்ளிட்ட பகுதிகளில் மகளிா் அணியின் மாவட்டச் செயலாளா், துணைத் தலைவா், இணைச் செயலாளா், மக்களவைத் தொகுதி பொறுப்பாளா்களுக்கான பதவியிடங்களுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வருகின்ற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லியின் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிக்க கட்சியின் நிா்வாகிகள் கடுமாயாக உழைக்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தொண்டா்கள் மாநாட்டில் கேட்டுக் கொண்டிருந்தாா். இந்நிலையில் மக்களவைத் தோ்தலுக்கு தயாராகும் வகைகயில் ஆம் ஆத்மி கட்சி புதிய நிா்வாகிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.