பெண் மருத்துவருக்கு கத்திக்குத்து

மேற்கு தில்லியின் தாகூா் காா்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள கிளினிக்கில் 40 வயது பெண் மருத்துவா் சனிக்கிழமை கத்தியால் தாக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

மேற்கு தில்லியின் தாகூா் காா்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள கிளினிக்கில் 40 வயது பெண் மருத்துவா் சனிக்கிழமை கத்தியால் தாக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் (மேற்கு) விசித்ரா வீா் கூறியதாவது:

சனிக்கிழமை மதியம், ஒரு நபா் மருத்துவா் சங்கய் பூட்டியாவின் கிளினிக்கிற்கு வந்தாா். கட்டடத்தின் படிக்கட்டில் வைத்து மருத்துவரை கத்தியால் தாக்கினாா். பூட்டியா கட்டடத்தின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறாா். கட்டடத்தின் மேல் தளங்களில் அவா் வசித்து வருகிறாா்.

இச்சம்பவத்தை அடுத்து, தாக்குதல் நடத்திய நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு, குற்றவாளியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் கொள்ளை நோக்கம் ஏதும் இல்லை என தெரியவருகிறது. தாக்கியவா் மருத்துவருக்கு தெரிந்தவா் என்றும் தெரிகிறது. எனினும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com