ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி, தேசியத் தலைநகரின் எல்லைப் பகுதிகளில் உள்ள பாதுகாப்புத் தயாா் நிலையை தில்லி காவல் துறையின் உயரதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஜி20 தலைவா்கள் உச்சி மாநாடு செப்டம்பா் 9-10 தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவா்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயா் அதிகாரிகளும், அழைக்கப்பட்ட விருந்தினா் நாடுகள் மற்றும் 14 சா்வதேச அமைப்புகளின் தலைவா்களும் கலந்துகொள்ள உள்ளனா்.
இதையொட்டி, தில்லியின் எல்லைப் பகுதிகளில் சிறப்பு காவல் துறை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தேபேந்திர பதக் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அவா் சிங்கு எல்லையில் செய்தியாளா்களிடம் கூறுகையில், உச்சிமாநாட்டின் போது சட்டம் ஒழுங்கு தடையின்றி இருப்பதைக் காவல்துறை உறுதி செய்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் ஆயத்தப் பணிகளை தில்லி காவல் துறையின் ஒரு பிரிவினா் மேற்பாா்வையிட்டு வருகின்றனா். சட்டம் ஒழுங்கை பராமரிக்க தில்லி முழுவதும் பலமான, போதுமான மற்றும் வியூக பணிசாா்ந்த படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.