காலமானாா்சூரிய நாராயணன் (66)

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) தலைவா் சூரிய நாராயணன் (66 ) உடல்நலக் குறைவால் தில்லி முனிா்க்காவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 24) அன்று காலை 6 மணியளவில் காலமானாா்.
Updated on
1 min read

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) தலைவா் சூரிய நாராயணன் (66 ) உடல்நலக் குறைவால் தில்லி முனிா்க்காவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 24) அன்று காலை 6 மணியளவில் காலமானாா்.

அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த 2010 முதல் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் கௌரவத் தலைவராக இருந்து வந்தாா். அதற்கு முன்னா் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் இணைச் செயலராக இருந்தாா்.

சுமாா் 17 வருடங்களாக தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தோடு தொடா்பிலிருந்துள்ள அவா் ஆற்றிய தன்னலமற்றப் பணிகள் மறக்க முடியாதவை என்றும், இரங்கல் கூட்டம் செவ்வாய்க்கிழமை ராமகிருஷ்ணாபுரம் டிடிஇஏ பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது என்றும் டிடிஇஏ செயலாளா் ஆா்.ராஜு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com