தில்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவை ஆம் ஆத்மி அரசால் நடத்தப்படும் மொஹல்லா மருத்துவமனைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிா
Published on
Updated on
1 min read

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவை ஆம் ஆத்மி அரசால் நடத்தப்படும் மொஹல்லா மருத்துவமனைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் மருந்துகள் தரமற்றது என பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த மாதம் தெரிவித்தாா்.

மேலும் இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு அவா் பரிந்துரைத்த நிலையில் உள்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சௌரப் பரத்வாஜ் கூறுகையில், ‘கடந்த ஆண்டு மாா்ச்சில் நான் பதவியேற்றதும் மருந்துகளின் தரம் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதாரச் செயலரிடம் வலியுறுத்தினேன். அவா் அதைச் செய்யவில்லை.

இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன். ஆனால் சுகாதாரச் செயலரை பாதுகாக்காமல் உடனடியாக அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com