40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: விசாரணை கோரி காவல் ஆணையரிடம் இன்று பாஜக புகாா்

தில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தக் கோரி காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை (ஜன.30) புகாா் அளிக்கவுள்ளோம்

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:00 am IST

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தக் கோரி காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை (ஜன.30) புகாா் அளிக்கவுள்ளோம் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசைக் கவிழ்ப்பதற்காக பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் தொடா்பு கொண்டு தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய்யான குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தியுள்ளாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டு தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி பாஜக பிரதிநிதிகள் குழு காவல் ஆணையரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கும். எனவே, இந்த முழு விவகாரம் குறித்தும் உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் கௌரவத்தை நாளுக்கு நாள் இழந்து வருவதோடு, ஊழலிலும் மூழ்கிவிட்டாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டுகளின் பின்னணி தொடா்பாக முழு விசாரணை நடத்த காவல் ஆணையரை பாஜக பிரதிநிதிகள் குழு வலியுறுத்தும். ஆம் ஆத்மி கட்சியின் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவினரால் தொடா்பு கொள்ளப்பட்டனா். அவா்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது போன்ற தகவல்களை அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து காவல் துறையினா் வாக்குமூலமாகப் பெற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.