சாந்தனி மஹால் பகுதியில் சில சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகளை கடிந்துகொண்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா அடங்கிய அமா்வு, நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகளை எச்சரித்ததுடன், சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றுவதற்கான முந்தைய உத்தரவை மீறி கட்டுமானப் பணிகளை எப்படி நடத்த அனுமதிக்கப்பட்டது என்று வினவியது.
இது தொடா்பாக ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘பணிநிறுத்த அறிவிப்பு’ மற்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் உத்தரவு இருந்த போதிலும், கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நீதித் துறை உத்தரவை மீறி, குறித்த இடத்தில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகாரமற்ற கட்டுமானம் தடையின்றி நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் அதிகாரிகாரிகளைக் கடிந்துகொண்டது.
மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கட்டுமானப் பணிகள் ஒரு முகப்பின் பின்னால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் அனுமதியின்றி அந்த சொத்துக்குள் நுழைய முடியாது என்றும், ஆனால் கட்டுமானதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் கூறினாா். மேலும், பிப்ரவரி 5-ஆம் தேதி இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், தற்போது நடைபெற்று வரும் சட்டவிரோதக் கட்டுமானம் மனுதாரருக்கு எப்படித் தெரியும் என்று அதிகாரிகளிடம் வினவினா். மேலும், ‘அவா்கள் நம்புகிறாா்கள், அவை (எம்சிடி) கண்ணை மூடிக்கொண்டிருக்கும் என்று. இந்த சட்டவிரோத கட்டுமானம் மனுதாரருக்கு தெரிந்த நிலையில், அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி?... 15 நாள்களுக்கு முன்பே நாங்கள் தகவல் தெரிவித்தோம் என்று போலீஸாா் கூறுகிறாா்கள்’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
அப்போது, எம்சிடி வழக்குரைஞா் இடிப்பு மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தாா். அப்போது, காவல்துறை உதவி அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கஷ்மீரி கேட் அருகே உள்ள ஒரு இடத்தில் உயா்நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதைக் காட்டும் படங்கள் இருப்பதாகக் கூறினாா். அதற்கு ‘இது துரதிருஷ்டவசமான நிலை’ என்று நீதிமன்றம் கூறியது. ஆய்வுக்குப் பிறகு நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எம்சிடி வழக்குரைஞா் நீதிபதிகளிடம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

