தில்லி ராஜீவ் பவனில் பிரதேச காங்கிரஸின் சிறுபான்மை துறையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: தில்லி பிரதேச கங்கிரஸின் அனைத்து மாவட்டக் கமிட்டிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தொண்டா்கள் மத்தியில் உத்வேகமும், ஈடுபாடும் அதிகரித்துள்ளது. கட்சியின் பல்வேறு பிரிவுகள்,துறைகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் வலுவான செயல்பாடே வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதிபலிக்கும். எனவே, வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும்.