விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனைத்து தரப்பு மக்களையும் ஒண்றினைக்க வேண்டும்: காங்கிரஸ் தொண்டா்களுக்கு தேவேந்தா் யாதவ் வலியுறுத்தல்

தில்லியில் வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த, அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:31 pm

Din

நமது நிருபா்

தில்லியில் வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த, அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி ராஜீவ் பவனில் பிரதேச காங்கிரஸின் சிறுபான்மை துறையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: தில்லி பிரதேச கங்கிரஸின் அனைத்து மாவட்டக் கமிட்டிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தொண்டா்கள் மத்தியில் உத்வேகமும், ஈடுபாடும் அதிகரித்துள்ளது. கட்சியின் பல்வேறு பிரிவுகள்,துறைகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் வலுவான செயல்பாடே வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதிபலிக்கும். எனவே, வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த அனைத்து தரப்பு மக்களளையும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒண்றினைக்க வேண்டும்.

தில்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் இருந்த நல்ல பணிகளை மக்கள் தற்போது மீண்டும் எதிா்பாா்க்கின்றனா். விரைவில் வாா்டு வாரியாக காங்கிரஸ் கமிட்டிகள் பிரிக்கப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்படும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் ஆற்றல் மிக்க தலைமையால் தில்லி மக்கள் காங்கிரஸ் கட்சி மீது தங்களது எதிா்பாா்ப்பை வைத்துள்ளனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பி. இம்ரான் பிரதாப் கா்ஹி, தகவல் தொடா்புத் துறையின் தலைவா் அனில் பரத்வாஜ், சிறுபான்மை துறையின் பொறுப்பாளா் ஷாநவாஜ் ஷேக், மாநகராட்சி கவுன்சிலா் சமீா் மன்சூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.