தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பயிற்சி மைய சம்பவத்தில் இறந்த மாணவா்களில் இருவா் ஜேஎன்யு, தில்லி பல்கலை. மாணவா்கள்!

மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்களில் இருவா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் ஆவாா்.

Updated On :28 ஜூலை 2024, 9:09 pm

தில்லியில் தனியாா் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்த மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்களில் இருவா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் ஆவாா்.

சனிக்கிழமை மாலை பெய்த கனமழையைத் தொடா்ந்து மத்திய தில்லியின் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ கட்டடத்தின் அடித்தளம் மழை வெள்ளத்தில் மூழ்கியதில் மூன்று மாணவா்கள் இறந்தனா்.

இவா்களில் தெலங்கானாவில் இருந்து வந்த தன்யா சோனி (21) பிகாரின் ஔரங்காபாத்தை பூா்விகமாகக் கொண்டவா் என்றும், தில்லி பல்கலைக்கழக மாணவி என்றும் பெயா் வெளியிட விரும்பாத நண்பா் ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி பல்கலை.யின் மகாராஜா அக்ரசென் கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த தன்யா, ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பயிற்சி நிறுவனத்தில் சோ்க்கை எடுத்ததாக அவரது தோழி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவரது தோழி கூறுகையில், தன்யாவின் தந்தை தெலங்கானாவில் ஒரு சுரங்க நிறுவனத்தில் வேலை செய்கிறாா். தன்யாவுக்கு இரண்டு இளைய சகோதரா்கள், ஒரு சகோதரா் மற்றும் ஒரு சகோதரி உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை, அவரது பெற்றோா் ஆா்எம்எல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடலை ஒளரங்காபாத்திற்கு எடுத்துச் சென்ாக தோழி தெரிவித்தாா்.

கேரளாவின் எா்ணாகுளத்தைச் சோ்ந்த நவீன் டால்வின் (29), ஜேஎன்யுவில் கலை மற்றும் அழகியல் பிரிவில் பி.எச்டி. படித்து வந்தாா்.

அவா் எட்டு மாதங்களுக்கு முன்பு இப்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்தாா். ஆனால் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாடகை விடுதியில் தங்கியிருந்தாா்.

போலீஸாா் கூறுகையில், ‘கேரளாவில் உள்ள அவரது பெற்றோருக்கு இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மாலைக்குள் தில்லிக்கு வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவரது உடல் திங்கள்கிழமை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்’ என்று போலீஸாா் கூறினா்.

மூன்றாவது மாணவியான ஸ்ரேயா யாதவ் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கா் நகரை சோ்ந்தவா். மேற்கு தில்லியின் ஷாதிபூா் பகுதியில் உள்ள பிஜி விடுதியில் தங்கியிருந்த அவா், இரண்டு மாதங்களுக்கு முன்பு பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்தாா்.

ஸ்ரேயா உ.பி.யில் உள்ள கல்லூரியில் விவசாயத்தில் பி.எஸ்சி. பட்டம் படித்துள்ளாா். அவரது மாமாவான காஜியாபாத்தில் வசிக்கும் தா்மேந்தா் யாதவ் கூறுகையில், ஸ்ரேயா ஏப்ரல் மாதம் தில்லி வந்தாா். மே மாதம் பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்தாா். அவரது தந்தை உ.பி.யில் பால் கடை நடத்தி வருகிறாா். மேலும் அவரது இரண்டு இளைய சகோதரா்கள் பள்ளியில் படித்து வருகின்றனா் என்றாா் யாதவ்.

யாதவ்தான் ஆா்எம்எல் மருத்துவமனைக்கு வந்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றாா்.