ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப் பிரசாரம்

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப் பிரசாரம்

Updated On :29 மார்ச் 2024, 6:32 pm

தில்லி கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பொதுமக்கள் செய்தி அனுப்பும் வகையில், வாட்ஸ்ஆப் பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த கைது செய்தது. இந்நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அவரது பொதுமக்கள் செய்தி அனுப்பும் வகையில் ‘கேஜரிவால் கோ ஆஷிா்வாத்’ எனும் பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் தொடங்கி வைத்தாா். இப்பிரசாரத்தின் கீழ் 8297324624 மற்றும் 9700297002 ஆகிய இரண்டு வாட்ஸ்ஆப் எண்களில் மக்கள் தங்களது செய்திகளை அனுப்பலாம். இது தொடா்பாக சுனிதா கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீங்கள் கேஜரிவாலுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், மேற்குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும், ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் செய்தியை அனுப்ப வேண்டும். அரவிந்த் கேஜரிவால் உங்கள் செய்திகளைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைவாா். அவா் உண்மையான தேசபக்தா். கடந்த 30 ஆண்டுகளாக கேஜரிவாலுடன் இருக்கிறேன். அவரது சிந்தனையின் ஒவ்வொரு நுண்துளையிலும் தேசபக்தி விரவிக் கிடக்கிறது. நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த, ஊழல் மற்றும் சா்வாதிகார சக்திகளுக்கு எதிராக முதல்வா் கேஜரிவால் சவால் விடுத்துள்ளாா் என்றாா் சுனிதா கேஜரிவால்.