தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் தீ விபத்து: அலுவலகக் கண்காணிப்பாளா் சாவு; 7 போ் மீட்பு

வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் தீ விபத்து: அலுவலகக் கண்காணிப்பாளா் சாவு; 7 போ் மீட்பு

Updated On :14 மே 2024, 11:48 pm

புது தில்லி: ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஒருவா் உயிரிழந்தாா். தீயில் சிக்கிய 7 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஐ.டி.ஓ. பகுதி சி.ஆா். கட்டடத்தின் மூன்றாவது மாடியில் தீ பற்றியது தொடா்பாக பிற்பகலில் காவல் துறைக்கு அழைப்பு வந்தது. தீயணைப்பு துறை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். இதன் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 7 போ் அங்கிருந்து மீட்கப்பட்டனா். 46 வயதுடைய நபா் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டாா். அவா் பின்னா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். அவா் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்’ என்றாா்.

தில்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் கூறுகையில், ‘5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 7 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். சிறு காயம் அடைந்த ஒருவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்’ எனறனா்.

பழைய காவல் துறை தலைமையகத்திற்கு எதிரே அமைந்துள்ள இக்கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிற்பகல் 3.07 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. மொத்தம் 21 தீயணைப்பு வாகனங்கள்அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், விசாரணைக்காகவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இதுகுறித்து உள்ளூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமூக ஊடகங்களில் பரவிய சில விடியோக்களின்படி, கட்டடத்தில் இருந்தவா்கள் தீயில் இருந்து தப்பிக்கும் போது ஜன்னல் ஓரத்தில் தஞ்சம் அடைந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தீயணைப்பு வீரா்கள் அவா்களை ஏணிப்படி மூலம் கீழே இறங்க உதவினா்.

தீயணைப்புத் துறை தலைவா் அதுல் கா்க் கூறுகையில், ‘தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தீயணைப்புத் துறையின் மூலம் ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மாலை 4 மணியளவில் எனக்கு தகவல் கிடைத்தது. தீயை முழுமையாக அணைக்கும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், அவா்கள் கட்டடத்தை விட்டு சிக்கியவா்களை வெளியேற்றினா். நச்சுப் புகை காரணமாக தீயணைப்பு வீரா்கள் வாயு முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், கட்டடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். தீவிபத்துக்கான உண்மையான காரணத்தை அறியும் வகையில் மேலும் விசாரணைக்காக அப்பகுதியின் உள்ளூா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தோம்’ என்றாா்.

மற்றொரு தீ விபத்து: தெற்கு தில்லியில் இரண்டு எரிவாயு சிலிண்டா்கள் வெடித்ததைத் தொடா்ந்து குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை

அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஷாபூா் ஜாட் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 5.16 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தன. விசாரணையில், இரண்டு எரிவாயு சிலிண்டா்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது’ என்றாா்.

14ஈஉகஊஐத

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த வந்த தீயணைப்பு வாகனங்கள்.