காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் வலைதலத்தில் வெளியிட்ட பதிவில் ’மகளிருக்கு முழு உரிமைகளையும் வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் விண்வெளிப் பயணம் வரை தேசக் கட்டமைப்பில் நம் நாட்டின் பெண் சக்தி, ஆண்களுக்கு இணையான பங்களிப்பை வழங்கியுள்ளது. தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதும், பெண்களுக்கான பாதுகாப்பின்மை, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், சமூக சுரண்டல், சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதும் மகளிர் காங்கிரஸின் பொறுப்பாகும்' என்று தெரிவித்துள்ளார்.