மக்களவையில் மத்திய காலால் வரி சட்டத் திருத்த மசோதா 2025 மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்றுப்பேசிய சசிகாந்த் செந்தில், ‘இழப்பீடு செஸ் உண்மையில் 5 ஆண்டுகளுக்கு முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால், முதன்மையாக வருவாயைப் பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. அதிக கடன்களை மத்திய அரசு வாங்கியதும் இதற்குக் காரணம். மேலும், இழப்பீட்டு செஸ் வரியை வாங்கிய கடன்களை அடைக்க அரசு பயன்படுத்தியது. ஜிஎஸ்டி குறைபாடுகள் கொண்டது என்பதையும், தொழில்நுட்ப தோல்விகளையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாகவும் மத்திய அரசு ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, சீா்திருத்தம் எனஅழைப்பது முற்றிலும் திசைதிருப்பும் நடவடிக்கை’ என்றாா்.