காா் நிறுத்துவதில் தனது சகோதரருடன் ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து வடகிழக்கு திடல்லியின் சீலம்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 38 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் நடந்தது, குற்றம் சாட்டப்பட்டவா் முகமது சாஹித் என அடையாளம் காணப்பட்டுள்புகாா்தாரா் இம்ரான் (33) தனது சகோதரா் தனது காரை சீலம்பூரில் உள்ள அவா்களின் இல்லத்திற்கு அருகில் நிறுத்தியதற்கு முகமது சாஹித் ஆட்சேபனை தெரிவித்துள்ளாா். வாக்குவாதம் அதிகரித்தது, அப்போது சாஹித் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை. ஆயுதச் சட்டத்தின் விதிகளுடன் பி. என். எஸ்ஸின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பாலிஸ்டிக் மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தது. போலீஸாா் அந்த பகுதியில் சோதனை நடத்தி சாஹித்தை கைது செய்தனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நீதி கேட்டு கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறிய இளம்பெண்

பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: அதிமுக ஆட்சியில் நீதி விசாரணை - எம்.பி. இன்பதுரை

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

