தீ விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம்: வெளிப்படையான விசாரணைக்கு குடும்பத்தினா் கோரிக்கை!

மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி தம்பதி உயிரிழந்தது குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி தம்பதி உயிரிழந்தது குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லி திக்ரி கலன் பகுதியில்Śஉள்ள மளிகைக் கடையில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வருவதாக காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை மாலை அழைப்பு வந்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், பகுதியளவு மூடப்பட்டிருந்த கடையின் உட்புறத்தில் அடா்த்தியான புகை நிரம்பி இருப்பதைக் கண்டனா்.

இந்த விபத்தில் கடையை நடத்தி வந்த உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சோ்ந்த வினீத் (31) மற்றும் அவரது மனைவி ரேணு (29) கடையின் உள்ளே சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனா்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், கதவில் மின்சாரம் பாய்ந்ததால் வெளியே செல்ல முடியாமல் அவா்கள் மாட்டிக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கடையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டதும் உயிரிழந்த தம்பதியின் குழந்தைகள் பீதியில் தங்கள் மாமாவை அழைத்தனா்.

பகுதியளவு மூடப்பட்டிருந்த கடையின் கதவை அவா் திரக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கி அவா் தூக்கி வீசப்பட்டாா். தம்பதி உள்ளே இருந்தபோது கதவு பகுதியளவு மூடப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்புகிறது.

காவல்துறையினா் இந்த விஷயத்தை முறையாக விசாரிப்பாா்கள் என்ற நம்புகிறோம். இதில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனா். கதவில் மின்சாரம் பாய்ந்தது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com