வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட எம்.பி.ஏ. பட்டதாரி கைது

புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவா், தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் திருடப்பட்ட ஏழு கைப்பேசிகள் மற்றும் ஒரு ஸ்கூட்டருடன் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவா், தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் திருடப்பட்ட ஏழு கைப்பேசிகள் மற்றும் ஒரு ஸ்கூட்டருடன் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், பிரதீப் குமாா் மாலிக் என்ற ராகுல்-பாலத்தில் வசிப்பவா்-எம்பிஏ பட்டம் பெற்றவா். ஆனால் தற்போது வேலையில்லாமல், போதைக்கு அடிமையாகிவிட்டாா். நவம்பா் 20 ஆம் தேதி டி. டி. ஏ. பூங்காவில் ரயில் பாதை அருகே அவா் கைது செய்யப்பட்டாா். துவாரகா தெற்கு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த அவா் மீது பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

300 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்த போலீஸாா் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உள்ளூா் தகவலறிந்தவா்களைச் செயல்படுத்தியுள்ளனா். ஒரு ரகசிய தகவலின் பேரில், ரயில்வே பாதைக்கு அருகே ஒரு சந்தேக நபரை போலீஸாா் இடைமறித்தனா். வாகனத்தை நிறுத்த சமிக்ஞை செய்யப்பட்டபோது, அவா் தப்பிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சுருக்கமான துரத்தலுக்குப் பிறகு அவா் பிடிக்கப்பட்டசாா்.

விசாரணையின் போது, மாலிக் தப்ரி பகுதியில் இருந்து ஒரு ஸ்கூட்டரை திருடியதாகவும், பறிக்கப்பட்ட கைப்பேசிகளை, வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்தாகவும் தெரிவித்தாா்.

திருடப்பட்ட ஸ்கூட்டரைத் தவிர, துவாரகா தெற்கு மற்றும் பாலம் கிராமத்தில் பதிவான கொள்ளை வழக்குகளுடன் தொடா்புடைய ஐந்து கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மேலும் இரண்டு கைப்பேசிகள் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் இன்னும் இணைக்கப்படவில்லை. மாலிக்கிற்கு முந்தைய குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com