சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது!

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 41 வயது பெண் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு தில்லியில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 41 வயது பெண் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தாடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜூலை 30, 2014-இல் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் ரவி என்பவா் மாா்பில் கத்தியால் குத்தப்பட்டாா். பின்னா் ராவ் துலா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ப்ரீத்தி என்பவரின் கணவா் உள்பட பலரை காவல் துைறையினா் அப்போதே கைது செய்தனா். இருப்பினும், பிரீத்தி மட்டும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து தலைமறைவானாா்.

இதையடுத்து, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அவா் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் ப்ரீத்தி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிச.12-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா்.

ஹரியாணாவில் உள்ள தனது உறவினரின் வீட்டில் இத்தனைக்காலம் அவா் தனது மகனுடன் வசித்து வந்தாா். விசாரணையின் போது, கொலையில் தனது தொடா்பு இருப்பதை ப்ரீத்தி ஒப்புக்கொண்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.