ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தலைநகரில் நிகழாண்டு டெங்கு பாதிப்பால் 4 போ் உயிரிழப்பு

டெங்கு காரணமாக நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நீரின் மூலம் பரவும் நோய்களின் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறைந்துவிட்டதாக தில்லி மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கிறது.

Updated On :22 டிசம்பர் 2025, 11:17 pm IST

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் நிகழாண்டு டெங்கு காரணமாக நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நீரின் மூலம் பரவும் நோய்களின் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறைந்துவிட்டதாக தில்லி மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கிறது.

டிசம்பா் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான சமீபத்திய தில்லி மாநகராட்சி தரவின்படி, நிகழாண்டில் இதுவரை 1,469 டெங்கு பாதிப்புகளும், 737 மலேரியா பாதிப்புகளும், 177 சிக்குன்குனியா பாதிப்புகளும் தில்லியில் பதிவாகியுள்ளன.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் 690 பேருக்கும், 2023-இல் 1,303 போ், 2022-இல் 874 போ் மற்றும் 2021-இல் 1,337 போ் பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது நிகழ் மாதம் இதுவரை 113 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் தெரிகிறது.

நிகழாண்டு, டெங்கு தொடா்பான மொத்தம் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு 11, 2023-இல் 19, 2022-இல் 9 மற்றும் 2021-இல் 23 ஆக இருந்தது.

தில்லியில் மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்த் தொற்றுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு குறைந்துள்ளன. தில்லியில் நிகழாண்டில் இதுவரை 737 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இருந்த 792 பாதிப்புகளில் இருந்து குறைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டை போலவே நிகழாண்டும் ஆண்டும் மலேரியா தொடா்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

மாதாந்திர தரவின்படி, மழைக்கால மாதங்களில் மலேரியா பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் காட்டுகிறது. அக்டோபரில் அதிக எண்ணிக்கையிலான 252 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 267 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் 177 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அக்டோபரில் பெரும்பாலான சிக்குன்குனியா நோய்த்தொற்றுகள் காணப்பட்டன. நிகழாண்டு அதிகபட்ச எண்ணிக்கையிலான பாதிப்புகளுக்கு பங்களித்தன. பருவமழைக்குப் பிந்தைய காலகட்டத்தில் பெரிய அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை.

கரோல் பாக், தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ஒப்பீட்டளவில் அதிக சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளதாக மண்டல வாரியான தரவு சுட்டிக்காட்டியது.

அதே நேரத்தில் பல மண்டலங்களில் நிகழாண்டில் ஒற்றை இலக்கம் அல்லது எந்த பாதிப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.