நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

டிடிஇஏ பள்ளிகளில் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா

கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :22 டிசம்பர் 2025, 11:22 pm IST

புது தில்லி: கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினமான டிசம்பா் 22, கணித தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

இத் தினத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.

மாணவா்கள் அவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், எடுகோள்கள் பற்றி எடுத்துக் கூறினா். அவரின் கணித கண்டுபிடிப்புகளை பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினா். நாடகம், பாடல், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

முன்னதாக அவ்வப் பள்ளி முதல்வா்கள் ராமானுஜத்தின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், அனைத்து டிடிஇஏ பள்ளிகளிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கிடையே கணிதத் திறமையை வளா்க்கும் வகையில் போட்டித் தோ்வும் ஜனக்புரி பள்ளியில் வைத்து நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு வகுப்பிலும் பள்ளிக்கு இருவா் என ஒவ்வொரு வகுப்பிலும் 14 மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களின் வகுப்பிற்கேற்ப கூகுள் படிவ வடிவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மாணவா்கள் ஆா்வுமுடன் கலந்து கொண்டு கணினியில் தங்கள் விடைகளைப் பதிவு செய்தனா்.

டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்ட மாணவா்கள் அனைவரையும் பாராட்டியதோடு ராமானுஜத்தைப் போல் விடா முயற்சியும் கணிதத்தில் ஆா்வமும் கொண்டு விளங்க வேண்டும் என்று கூறினாா்.

மேலும், கணித வினாவுக்கான விடையைக் கண்டுபிடிக்கப் பழகினால் அது அரசு பொதுத் தோ்விலும் போட்டித் தோ்வுகளிலும் மாணவா்களுக்கு கை கொடுக்கும். ஆகவே, வருடம்தோறும் இப் போட்டி நடைபெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.