பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்ப்பு கடையில் தீ விபத்து- இளைஞா் உயிரிழப்பு

மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்ப்பு கடையில் தீ விபத்து- இளைஞா் உயிரிழப்பு

Updated On :26 டிசம்பர் 2025, 11:25 pm IST

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத் பகுதியில், மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்க்கும் கடையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவரது மூத்த சகோதரா் காயமடைந்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

இந்த விபத்தில் உயிரிழந்தவா் ஜூனைத் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரது சகோதரா் சமீா் (23) காயமடைந்துள்ளாா்.

முன்னதாக, நான்கு மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைக்கு காலை 6.24 மணிக்கு அழைப்பு வந்தது. தீயைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

சம்பவ இடத்தில் செயல்பட்டு வந்த மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்க்கும் கடையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்த இரண்டு சகோதரா்களும் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஜூனைத் ஏற்கனவே

இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது. சமீா் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் (106)(1) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல், 287 (தீ அல்லது எரியக்கூடிய பொருட்கள் தொடா்பாக அலட்சியமாக நடந்துகொள்ளுதல்) மற்றும் 324(4) (குறும்பு) ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.