திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உயிருக்கு அச்சுறுத்தல்: தில்லி நீதிமன்றத்தில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி புகாா்

உயிருக்கு அச்சுறுத்தல்: தில்லி நீதிமன்றத்தில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி புகாா்

Updated On :16 நவம்பர் 2025, 12:29 am IST

தென்மேற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் கல்வி நிறுவனத்தில் 16 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி, திகாா் சிறைக்குள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

அக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவா், பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ளாா். வெள்ளிக்கிழமை 14 நாள் நீதிமன்றக் காவல் முடிந்ததும், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அனிமேஷ் குமாா் முன் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவா் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

சிறை அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்த போதிலும், தனது துறவி அங்கிகளை அணிய அனுமதிக்கப்படவில்லை என்றும், துறவிகளுக்கான உணவு முறையும் அனுமதிக்கப்படவில்லை என்றும் சைதன்யானந்தா கூறினாா்.

இதையடுத்து, சிறை அதிகாரிகளிடமிருந்து விரிவான நிலை அறிக்கையைக் கோரிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை நவம்பா் 18-க்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, நவம்பா் 7-ஆம் தேதி, நீதிமன்றத்தில் தனது ஜாமீன் மனுவை சைதன்யானந்தா திரும்பப் பெற்றாா். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு குற்றச்சாட்டுகள் ஆராயப்பட வேண்டியிருப்பதால், ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதி தீப்தி தேவேஷிடம் அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.

சாமியாரால் பாதிக்கப்பட்ட தாகக் கூறப்பட்ட 16 பேரில் ஒன்பது பேரை விசாரித்ததாக தில்லி காவல்துறை அக்டோபா் 27 அன்று விசாரணை நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, குற்றத்தின் தீவிரம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அக்டோபா் 13 அன்று விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டது.

எஃப்ஐஆரின்படி, சைதன்யானந்தா மாணவிகளை நள்ளிரவில் தனது அறைக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அவா்களுக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவா் தனது கைப்பேசி மூலம் மாணவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.

62 வயதான சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி செப்டம்பா் 28 அன்று ஆக்ராவில் இருந்து கைது செய்யப்பட்டாா்.