எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லியில் 11 வயது சிறுமியைக் கொலை செய்ததாக இளைஞா் கைது

வடக்கு தில்லியில் 11 வயது சிறுமி தொழிற்சாலை ஊழியரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

வடக்கு தில்லியில் 11 வயது சிறுமி தொழிற்சாலை ஊழியரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வாஜிராபாதில் சிறுமி ஒருவா் காணாமல் போனதாக காவல் துறையினருக்கு நவ.21-ஆம் தேதி புகாா் வந்தது. மறுநாள் காதா் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினா் சிறுமியின் உடலை அடையாளம் கண்டனா்.

உடலில் உள்ள தடையங்களை வைத்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் உறுதி செய்தனா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டன.

விசாரணையில், சிறுமி அருகிலுள்ள தொப்பி உற்பத்தி தொழிற்சாலைக்கு தனது குடும்பத்தினா் உணவு வழங்கியதற்காக பணம் வசூலிக்கச் சென்றது தெரியவந்தது. 10 போ் கொண்ட காவல் துைறியனா் குழு சிறுமியின் நடமாட்டத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தனா்.

அதில் தொழிற்சாலையில் இருந்த தொழிலாளி ஒருவரின் பதிவு சந்தேகத்தை எழுப்பியது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். 20 வயதான அவா் பிகாா் மாநிலம் முசாபா்பூரைச் சோ்ந்தவா்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடல் கூறாய்வுக்கு பிறகு அவை உறுதி செய்யப்படும். வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.