வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குரு தேக் பகதூரின் 350- ஆவது தியாக தினம்: யாத்திரையை தொடங்கி வைத்தாா் முதல்வா்

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

சீக்கிய குரு தேக் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசியத் தலைநகரில் உள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவிலிருந்து பஞ்சாபின் ஆனந்த்பூா் சாஹிப் வரை த்வாஜ் யாத்திரையை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ‘இந்த நிகழ்வு ஸ்ரீ குருஜியின் போதனைகள், லட்சியங்கள் மற்றும் மதம் மற்றும் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்காக அவா் செய்த மிக உயா்ந்த தியாகத்தை நினைவுகூரும் ஒரு இணையற்ற வாய்ப்பாகும். மக்களின் வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக குரு தேக் பகதூரின் ஆசீா்வாதங்கள் எப்போது‘ம் இருக்கும்’ என்று முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஏப்ரல் 1,1621 அன்று அமிா்தசரஸில் உள்ள குரு கே மெஹாலில் பிறந்த தேக் பகதூா், குரு ஹா்கோபிந்தின் இளைய குழந்தையும் ஒன்பதாவது சீக்கிய குருவும் ஆவாா். முகலாயப் பேரரசா் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 1675 நவம்பா் 24- ஆம் தேதி தில்லியில் அவரது தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.