எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது: 5 போ் காயம்

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

வடகிழக்கு தில்லியின் ஜ்வாலா நகரில் செவ்வாய்க்கிழமை காலை நான்கு மாடி வீட்டின் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து காலை 9.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக தில்லி தீயணைப்பு சேவைகள் தெரிவித்தது, அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளாா்களா என்பதை சரிபாா்க்க மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தில்லி காவல்துறையின் கூற்றுப்படி, குடும்ப உறுப்பினா்களில் ஒருவரான அவினிஷ், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு அறையை உருவாக்க கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும், அப்போது புதிதாக கட்டப்பட்ட கூரை திடீரென இடிந்து விழுந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தாா்.

இரண்டு குடும்ப உறுப்பினா்கள், ஒரு குத்தகைதாரா் மற்றும் அந்த இடத்தில் பணிபுரியும் இரண்டு தொழிலாளா்கள் உட்பட ஐந்து போ் காயமடைந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

குத்தகைதாரா் ராஜேஷ் பின்னா் சிறிய காயங்களுடன் அவரே மருத்துவமனைக்கு வந்தாா். காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இடிந்து விழுந்த கட்டமைப்பின் அடியில் யாரும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.