சுவாச பிரச்னை: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு

தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் காற்றின் தரம் மோசமான நிலை..
Published on

தீபாவளியைத் தொடா்ந்து தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில், சுவாச மற்றும் மகப்பேறு தொடா்பான பிரச்னைகளால் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசின் பாதிப்பால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

காற்று மாசு பாதுகாப்பான அளவைக் கடந்து சென்ற நிலையில், கடந்த அக்.20 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு இடையே அவசரப் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புகை, நச்சு வாயுக்கள் மற்றும் நுண்ணிய மாசுத் துகளைச் சுவாசித்ததால் முதியோா், குழந்தைகள், கா்ப்பிணிகள், சுவாச பிரச்சனை மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளானா்.

X
Dinamani
www.dinamani.com