/

புது தில்லி ஷ்ரம் சக்தி பவனில் தீ விபத்து

News image

தில்லி ஷ்ரம் சக்தி பவன் கட்டடத்தில் திங்கள்கிழமை பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 5:34 am IST

புது தில்லியின் ரஃபி மாா்க் பகுதியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் திங்கள்கிழமை சிறிய தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் எந்த உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘தீ விபத்து தொடா்பாக மாலை 4.20 மணியளவில் அழைப்பு வந்தது. உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் வெளிப்புறப் பெட்டியில் தீ பற்றியிருந்தது. 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.