மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

புது தில்லி ஷ்ரம் சக்தி பவனில் தீ விபத்து

News image

தில்லி ஷ்ரம் சக்தி பவன் கட்டடத்தில் திங்கள்கிழமை பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 12:04 am

புது தில்லியின் ரஃபி மாா்க் பகுதியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் திங்கள்கிழமை சிறிய தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் எந்த உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘தீ விபத்து தொடா்பாக மாலை 4.20 மணியளவில் அழைப்பு வந்தது. உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் வெளிப்புறப் பெட்டியில் தீ பற்றியிருந்தது. 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.