வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வீட்டில் இளம் பெண் சடலம் மீட்பு: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

வீட்டில் இளம் பெண் சடலம் மீட்பு: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

தில்லியின் நியூ உஸ்மானபூா் பகுதியில் உள்ள தனது வீட்டில் 24 வயது பெண் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டாா் என்று காவல்துறை தெரிவித்தனா்.

இது தற்கொலை வழக்காக இருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

சனிக்கிழமை அதிகாலையில் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல்

கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் குழு கௌதம் விஹாரில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு அந்தப் பெண் தனது அறைக்குள் சடலமாகக் கிடந்தாா்.

இதையடுத்து, அந்தப் பெண் ஜக் பிரவேஷ் சந்திரா ஜேபிசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

சம்பந்தப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கவும், இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்தவும் ஒரு தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதுவரை எந்தத் தற்கொலைக் கடிதமும் மீட்கப்படவில்லை.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விசாரணையின் ஒரு பகுதியாக குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.