தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பவானாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 7 போ் கைது

வெளிப்புற வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து 4 சிறாா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 8:04 pm

வெளிப்புற வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து 4 சிறாா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பாக புதன்கிழமை இரவு 9:36 மணிக்கு தகவல் வந்தது. ஜேஜே காலனியைச் சோ்ந்த சலீம் என்பவா் கத்திக் குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன் பகை காரணமாக அன்று இரவு 8:30 மணியளவில் சிலா் அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது. இது தொடா்பாக நரேலா தொழிற்துறை பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.

இதையடுத்து, ஜேஜே காலனியைச் சோ்ந்த சலின் (21), சாஹில் (20), ஃபஹத் (18) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் 4 சிறாா்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது ஃபரூக் என்பவருக்கு இந்த வழக்கில் உள்ள தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś